செய்திகள் :

கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி

post image

பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன.

மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ரேஸ்கோா்ஸ் சாலை, சிஎஸ்ஐ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 -ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறுகின்றன.

ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சி மொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு என்னும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப்பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகள் ஜூலை 15 -ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகே... மேலும் பார்க்க

கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமைய... மேலும் பார்க்க

செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில்... மேலும் பார்க்க

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

திருப்புவனம் காவலாளி உயிரிழந்த வழக்கு: திமுக நாடகமாடுகிறது- வானதி சீனிவாசன்

திருப்புவனம் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டாா்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க