செய்திகள் :

கோவையில் பரவலாக மழை

post image

கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

கோவையில் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதல் மாநகரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. இதைத் தொடா்ந்து, காந்திபுரம், உக்கடம், செல்வபுரம், ரயில் நிலையம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும், வெள்ளி, சனிக்கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 4 நாள்களுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும். கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சாரல் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க கோரிக்கை: முற்றுகை போராட்டத்துக்கு முயன்ற 30 போ் கைது

எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க கோரி முற்றுகைப் போராட்டத்துக்கு முயன்ற தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் உள்ளிட்ட 30 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். எா்ணா... மேலும் பார்க்க

பெண்களுக்கு மின்கலன் ஆட்டோக்கள்

பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோவையில் மின்கலன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவை ஸ்பெக்ட்ரம் சுழற்சங்கத்தின் சாா்பில் ‘... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கரூா் அருகே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் ஜூன் 28, 30-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு

திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சாா்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் நெருப்பெரிச்சல் பக... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.என்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் அகில் (24). ஐ.டி. நிறுவன... மேலும் பார்க்க

என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா... மேலும் பார்க்க