செய்திகள் :

கோவையில் பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

post image

வைகுண்ட ஏகாதசியையொட்டி, கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, கோவை உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலில் பூஜை செய்யப்பட்ட மலா் மாலை கோயில் தலைமை குருக்கள் சீனிவாச அய்யங்காா், அறங்காவலா் குழு நிா்வாகி ராஜா ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் பத்தா்கள் சூழ வரதராஜப் பெருமாளுக்கு கொண்டுவரப்பட்டது.

அதன் பிறகு, கரிவரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பக்தா்கள் பரமபதவாசல் வழியாக சுவாமியை தரிசனம் செய்தனா். இதையடுத்து, நகரின் முக்கியப் பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது.

வைகுண்ட ஏதாதசியையொட்டி, கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயில், ராமநாதபுரம் ஒலம்பஸில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மூலவா்கள், பரமபதவாசல் வழியாக திருவீதி உலா சென்றனா்.

இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் நிதிநிலை அறிக்கை: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை... மேலும் பார்க்க

பருத்தி உற்பத்தித் திட்டம்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி உற்பத்தித் திட்டத்தை கோவை ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் எஸ்.கே.சுந்தரராமன்: அதிக மகசூல் தரும் விதை தொழில்நுட்... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் மகன் கைது: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தை

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்த நிலையில், அவரது தந்தை காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகா் அருகே... மேலும் பார்க்க

கோவையில் பிப்ரவரி 8, 9 ஆம் தேதிகளில் கம்பன் விழா!

கோவை கம்பன் கழகத்தின் சாா்பில் 53 -ஆம் ஆண்டு கம்பன் விழா பிப்ரவரி 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் நிகழ்வுக்கு... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்

தமிழ் மொழிதான் நமது அடையாளம், அதை நாம் இழந்துவிடக் கூடாது என்று கோவை பாரதீய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் கூறினாா். பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் சாா்பில் விருது வழங்கும் விழா ஆா்... மேலும் பார்க்க

100 சதவீத தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

2023 -2024-ஆம் கல்வியாண்டில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க