செய்திகள் :

கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை; கைதான ஓட்டுநர் - விசாரணையில் அதிர்ச்சி

post image

கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணக்குமார், தன் மனைவி மகேஸ்வரி (47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர் அவர்கள் வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

சுரேஷ்

நேற்று காலை அவர்களின் வீட்டுக்கு சென்ற சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, வடவள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.

அவர்கள் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விசாரணையில் இறங்கினார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சரவணக்குமார், மகேஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மகேஸ்வரி

இருப்பினும் சுரேஷ் அவர்கள் குடும்பத்தில் பணியாற்றி வந்தார். சுரேஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் வீட்டில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன் கணவனுக்கு உள்ள  பெண்கள் தொடர்பு பற்றி கேள்விகளை எழுப்பி, ‘அவர் இப்படியாக நீ தான் காரணம்’ என்று மகேஸ்வரி சுரேஷை அடிக்கடி திட்டி வந்தாராம். இன்றும் அவர் அப்படி சொல்லியதால ஆத்திரத்தில் சுரேஷ் அவரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கொலை
கொலை

இதுதொடர்பாக மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். சுரேஷை கைது செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

திண்டுக்கல்: கல்லூரி மாணவி பரிதாப மரணம்; கருவை கலைக்க நாட்டு மருந்து குடித்தாரா? - போலீசார் விசாரணை

திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, கடந்த 24-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்."17 வயது கல்லூரி மாணவி க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரி வேஷம்: `பாலியல் வன்கொடுமை செய்ய நாடகம்' - போலீஸில் சிக்கிய இளைஞர்

பெண் மருத்துவருடன் பழக இராணுவ அதிகாரி போல வேடமிட்ட டெலிவரி முகவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டெல்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரவ் மாலிக் (27). இவர் தனியார்... மேலும் பார்க்க

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்ற... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க