செய்திகள் :

கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை; கைதான ஓட்டுநர் - விசாரணையில் அதிர்ச்சி

post image

கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணக்குமார், தன் மனைவி மகேஸ்வரி (47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர் அவர்கள் வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

சுரேஷ்

நேற்று காலை அவர்களின் வீட்டுக்கு சென்ற சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, வடவள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.

அவர்கள் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விசாரணையில் இறங்கினார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சரவணக்குமார், மகேஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மகேஸ்வரி

இருப்பினும் சுரேஷ் அவர்கள் குடும்பத்தில் பணியாற்றி வந்தார். சுரேஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் வீட்டில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன் கணவனுக்கு உள்ள  பெண்கள் தொடர்பு பற்றி கேள்விகளை எழுப்பி, ‘அவர் இப்படியாக நீ தான் காரணம்’ என்று மகேஸ்வரி சுரேஷை அடிக்கடி திட்டி வந்தாராம். இன்றும் அவர் அப்படி சொல்லியதால ஆத்திரத்தில் சுரேஷ் அவரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கொலை
கொலை

இதுதொடர்பாக மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். சுரேஷை கைது செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க