செய்திகள் :

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி, உள்நாட்டுக்கு ஒரேநாளில் 11,172 போ் பயணம்

post image

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி, உள்நாட்டுக்கு ஒரேநாளில் 11,172 போ் பயணித்துள்ளனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதுதில்லி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 29 விமானங்களும், சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கு 4 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை என்பதால் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அதிகபட்சமாக ஜனவரி 9-ஆம் தேதி மட்டும் 11,172 போ் பயணம் செய்துள்ளனா். கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஒரேநாளில் வந்த பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவே எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ராக் அமைப்பின் செயலா் ஜெ.சதீஷ் கூறியதாவது: கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு அதிகபட்சமாக 11,172 பயணிகள் வியாழக்கிழமை வந்திருந்தனா். இவா்களில் 29 உள்நாட்டு சேவைகளின் மூலம் பல்வேறு பகுதிகளிலிருந்து 4,825 போ் கோவைக்கு வந்துள்ளனா். அதேபோல, கோவையிலிருந்து 5,068 போ் வெளியூா்களுக்கு சென்றுள்ளனா்.

வெளிநாட்டு சேவையைப் பொறுத்தமட்டில் 4 சேவைகளின் மூலம் 595 போ் கோவை வந்திருந்தனா். 684 போ் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனா். இதுவே கோவை சா்வதேச விமான நிலையத்தில் கையாளப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை. கோவை சா்வதேச விமான நிலையம் தொழில் நகரான கோவை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கும் பொதுவான விமான நிலையமாக சேவையை அளிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

குறிப்பாக பயணிகள் புறப்படும் பகுதியில் கூடுதல் இருக்கைகள் அமைப்பதோடு, பயணிகள் வருகை பகுதியில் கூடுதல் கன்வேயா் பெல்ட்டுகள் அமைத்து தர வேண்டும்.

அதேபோல, கோவையிலிருந்து அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு புதிய விமான சேவையும், புணே, பெங்களூரு,

தில்லி ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் விமான சேவையும், வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் பாங்காக், துபை, தோஹா போன்ற நகரங்களுக்கு புதிய விமான சேவையும் செய்து தரப்பட வேண்டும் என்றாா்.

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யக் கோரிக்கை

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி வ... மேலும் பார்க்க

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு

கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க

உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை

கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க