செய்திகள் :

கோவை: புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர்கள் கைதின் பின்னணி என்ன?

post image

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ்குமார், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த குஷால் பிஷ்வாஷ், அலி காதர்  ஷேக் ஆகியோர் கோவையில் பணியாற்றி வருகிறார்கள்.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்

அவர்கள் ஊருக்குச் சென்ற நிலையில், ரயில் மூலம் நேற்று  கோவை திரும்பியுள்ளனர். அவர்களுடன் மேலும் சில புலம்பெயர் தொழிலாளிகள் இருந்துள்ளனர்.

கோவை ரயில் நிலையத்திலிருந்து பணி இடத்துக்குச் செல்வதற்காக, அங்கிருந்த வாடகை ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆனால், புலம்பெயர் தொழிலாளிகளின் பணி இடத்துக்கு ஆட்டோ ஓட்டுநர் செல்லாமல் ஆவாரம்பாளையம் ரயில்வே பாலத்தின் கீழ் சென்று நிறுத்தியிருக்கிறார்.

அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முகமது அசாருதீன், நௌபல் பாஷா, செந்தில்குமார் புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டியுள்ளனர்.

பணம் பறிப்பு
பணம் பறிப்பு

“எங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ10,000 வேண்டும்” என்று மிரட்டியவர்கள் கூகுள் பே மூலம் ரூ.13,000 பணத்தை அபகரித்து அவர்களை விட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த புலம்பெயர் தொழிலாளிகள் பதறியடித்து சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக தங்களின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர்கள் செந்தில்குமார், முகமது அசாருதீன், நௌபல் பாஷா மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்

இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதேபோல கோவைக்கு வரும் தமிழ் தெரியாத புலம்பெயர் தொழிலாளிகளைக் குறிவைத்து ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாகக் கூறி பிறகு மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் இந்தக் குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 3 ஆட்டோக்களையும் காலவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கரூர்: 'ரௌடியை பிடிக்க முயன்ற போலீஸ்; தாக்கிவிட்டு ஓடியதால் சுட்டுப் பிடிப்பு!' - நடந்தது என்ன?

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்ட... மேலும் பார்க்க

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இ... மேலும் பார்க்க

திருப்பூர்: செல்போனில் கேம் விளையாடியதை எச்சரித்த தாய்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் தனது தந்தை அல்லது தாயின்... மேலும் பார்க்க

``கோயில், குளம் என சுற்றுகிறாள், சரியாக கவனிக்கவில்லை ஆத்திரத்தில்..'' - மகளை கொன்ற 78 வயது தந்தை

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேலு இருந்து வந்துள்ளா... மேலும் பார்க்க

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த 26 வங்கதேசத்தினர் கைது; பின்னணி என்ன?

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாகப் பின்னலாடை வர்த்தகத்தில் வங்கதேசம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக பின்னலாடைத் துறை விளங்கி வருகிறது.இருந்தாலும், போதிய ஊதியம் கிடைக்காததால்... மேலும் பார்க்க

தேனிலவில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற சோனம்; 3 மொபைல்கள் எங்கே? விசாரணையில் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கடந்த மாதம் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். சென்ற இடத்தில் கூலிப்படையின் துணையோடு கணவனை கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்... மேலும் பார்க்க