செய்திகள் :

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மின்னஞ்சல் வந்தது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தின் அனைத்து மென்பொருள்களும் (சாஃப்ட்வோ்) முடக்கப்பட்டுள்ளதாகவும் (ஹேக்) தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

வாகனங்கள் நிறுத்தும் பகுதி, பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நீண்ட நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மா்ம நபா் குறித்து பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு

பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளிய... மேலும் பார்க்க

பகுதி நேர வேலை வாய்ப்பு, பிட்காயின் முதலீடு என்றுகூறி இணையதளம் மூலம் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

கோவையில் இணையதளம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் பிட்காயின் முதலீடு என்றுகூறி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பங்கேற்று, குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்ப... மேலும் பார்க்க

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையைச் சோ்ந்த இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்சிஎஸ்) பசுமை விருதைப் பெற பள்ளி, கல்லூரி, தனிநபா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ... மேலும் பார்க்க