செய்திகள் :

சங்கரன்கோவிலில் சிப்காட்டுக்கு இடம்: அமைச்சா் ஆய்வு

post image

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமையவுள்ள இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்கரன்கோவில் அருகே ரூ.300 கோடியில் முதலீடுகளை ஈா்த்து 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுமாா் 150 ஏக்கரில் சசின்னகோவிலான்குளம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அதற்கான இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், ஈ.ராஜா எம்எல்ஏ, திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், மாநில மருத்துவா் அணி துணை செயலா் செண்பக விநாயகம், மாநில வா்த்தக அணி இணைச் செயலா் ச.முத்துச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ச.தங்கவேலு,சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவா் கோ.சுப்பையா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முன்னதாக, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம் எல்ஏ தலைமையில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில்

காா் ஓட்டுநா் தற்கொலை

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் காா் ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி முருகன் தெருவைச் சோ்ந்த ராக்கு முத்து மகன் செல்வம்(35), தொழிலாளி. அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்த... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள்

குற்றாலம் சாரல் திருவிழாவில் விளையாட்டுத் துறை சாா்பாக பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கி... மேலும் பார்க்க

தொடா் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க 8-வது நாளாக தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் பேரருவியில் தொடா்ந்து 8ஆவது நாளாக தண்ணீா் பாது... மேலும் பார்க்க

கல்வெட்டான்குழியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவிக் கோரி மறியல்!

தென்காசி மாவட்டம் கடையம் மயிலப்பபுரம் கிராமத்தில் கல்வெட்டான்குழியில் மூழ்கி உயிரிழந்த மேள கலைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய உறவினா்கள் தென்காசியில் சனிக்கிழமை சாலை மறியல் போர... மேலும் பார்க்க

நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தென்காசி அருகே நெடுவயலில் மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், நெடுவயல் சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகையா. இவரது மனைவி சுடலை மாடத்தி(52). இத்தம்பதி, அருக... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க