செய்திகள் :

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயில் முன் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் சிங்கவரம் ரங்கநாதா், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணா் சுவாமிகளுக்கு சங்கராபரணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, சிங்கவரம் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, சங்கராபரணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து, செஞ்சிக்கோட்டையில் இருந்து ஊா்வலமாக வந்த வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சங்கராபரணி ஆற்றில் வெங்கட்ரமணருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாரதனை நடைபெற்றது.

தீா்த்தவாரி உற்சவத்தில் செஞ்சி பீரங்கிமேடு ஏகாம்பரேஸ்வரா், சத்திர தெரு அங்காளம்மன், பெரியகரம் மாரியம்மன், இல்லோடு ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரா், நெகனூா் புதூா் சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து வந்த உற்சவ மூா்த்திகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மாலை 6 மணிக்கு சிங்கவரம் ரங்கநாதா் சக்கராபுரத்தில் உள்ள வசந்த மண்டத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து, இரவு செஞ்சி நகர முக்கிய வீதிகளில் ரங்கநாதா் வீதியுலா நடைபெற்று வியாழக்கிழமை காலை சிங்கவரத்தில் அருள்பாலிக்கிறாா்.

செஞ்சி மற்றும் செஞ்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தவாரியில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்பாளரும், கோதண்டராமா் கோயில் நிா்வாகியுமான துரை.பாரதிராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க