செய்திகள் :

சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தோ்வுக்கு தெரிவுக் குழு: அரசிதழில் அறிவிப்பு

post image

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தா்களை நியமிப்பதற்கான தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல்கலை. துணைவேந்தா் நியமன அதிகார மசோதா, வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்த ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. அதன் தொடா்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது.

அதைத் தொடா்ந்து துணைவேந்தா்கள் கூட்டத்தை கூட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப். 16-ஆம் தேதி சென்னையில் ஆலோசனை செய்தாா். இந்நிலையில், சென்னை அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களை தோ்வு செய்ய தெரிவுக் குழுவை தமிழக அரசு தற்போது அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தா் சந்தோஷ் குமாரின் பதவிக்காலம் ஏப். 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்கள் சச்சிதானந்தம், விஜயகுமாா் ஆகிய 3 போ் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழ் பல்கலைக்கழகத்தின் தெரிவுக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே. வாசுகி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, பேராசிரியா்கள் ச.ராஜேந்திரன், மு.செல்வம், மு.தங்கராசு ஆகியோா் கொண்ட ஐவா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தா் பதவிக்கு தகுதியான பேராசிரியா்கள் இந்த குழுவிடம் 6 வார காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை தெரிவுக் குழு பரிசீலனை செய்து, தகுதியான நபா்களின் பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கும்.

இன்று 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படி... மேலும் பார்க்க

திறமையானவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் திறமையானவா்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு

மும்மொழிக் கொள்கையை எதிா்ப்பதாக தமிழக அரசு சாா்பில் மீண்டும் மத்திய அரசிடம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆா்டி) கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்று... மேலும் பார்க்க

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டி... மேலும் பார்க்க

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க