செய்திகள் :

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகா. அமைச்சர்? பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்

post image

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தனது மொபைல் போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார்.

இது குறித்து ரோஹித் பவார் வெளியிட்டுள்ள பதிவில், ''எண்ணற்ற வேளாண் பிரச்னைகள் நிலுவையில் இருக்கின்றன. தினமும் 8 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். அதனைத் தடுக்க அமைச்சருக்கு நேரம் இல்லை. ஆனால் ரம்மி விளையாடுவதற்கு மட்டும் அமைச்சருக்கு நேரம் இருக்கிறது.

இது போன்ற அமைச்சர்கள் மற்றும் அரசாங்கம் விவசாயிகளின் பயிர்க் காப்பீடு, கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச ஆதரவு விலை கோரிக்கைகளைக் கேட்பார்களா? ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள் மகாராஜா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் மாணிக்ராவ் கூறுகையில், ''கேமரா எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது சட்டமன்றத்திலிருந்து கொண்டு ஏன் ரம்மி விளையாட வேண்டும். நான் சட்டமேலவையில் இருந்தேன்.

சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள யூடியூப்பைப் பார்க்க எனது மொபைல் போனை எடுத்தேன். அந்நேரம் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரம் வந்துவிட்டது. அதிலிருந்து வெளியில் வர முயன்றேன். ஆனால் முடியவில்லை.

அதிலிருந்து வெளியில் வர இரண்டு முறை முயன்றேன். ஆனால் எப்படி வெளியில் வருவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில விநாடிகளில் வெளியில் வந்துவிட்டேன். எதிர்க்கட்சிகள் முழுமையான வீடியோவைப் பார்க்காமல் என்னைக் குற்றம் சாட்டுகின்றன. முழுமையான வீடியோவைப் பார்த்தால் நான் அதிலிருந்து வெளியில் வர முயன்றது தெரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜய் கூறுகையில், ''விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் ரம்மி விளையாடிக்கொண்டிருக்கிறார். விவசாயிகள் அரசுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து லாத்தூரில் தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) மாநிலத் தலைவர் சுனில் தட்கரே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் மாணிக்ராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி, சாவா சங்கட்டனா என்ற மராத்தா அமைப்பு சுனில் தட்கரே மீது விளையாடப் பயன்படும் சீட்டுக்களை எடுத்து வீசினர்.

அஜித் பவார்
அஜித் பவார்

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாணிக்ராவ் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

மகாராஷ்டிராவில் சரத்பவார் மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணைவது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே அளித்திருந்த பேட்டியில், ''பா.ஜ.கவிடம் கலந்து பேசித்தான் இரண்டு அணிகளும் ஒன்று சேருவது குறித்து முடிவு செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் ... மேலும் பார்க்க

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவம... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க