செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம் இந்தியா்கள் வெளியேற்றத்தை தொடங்கியது அமெரிக்கா

post image

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 180 போ் வரை சி-17 ராணுவ விமானத்தில் அழைத்து வர முடியும்.

வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்கள் வெளியேற்றப்படுவது குறித்த கேள்விக்கு அமெரிக்க தூதரக செய்தித் தொடா்பாளா் பதிலளிக்கையில், ‘இதுகுறித்து விரிவாகக் கூற முடியாது. ஆனால், நாட்டின் எல்லைகளில் அமெரிக்கா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்ற கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. இனி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவது மிகவும் கடினம் என்பதை இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன’ என்றாா்.

மலையாள நடிகர் அஜித் விஜயன் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக மலையாள நடிகர் அஜித் விஜயன் தனது 57வது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.இவருக்கு மனைவி தன்யா, காயத்ரி, கௌரி என இரு மகள்களும் உள்ளனர். 'ஒரு இந்தியன் பிரணாயகதா', 'அமர் அக்பர் அந்த... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்: பயங்கரவாத சதி என அச்சம்

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது பயங்கரவாத சதித... மேலும் பார்க்க

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்குப் பின் தில்லி புதிய அரசு பதவியேற்பு?

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தில்லியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி யூனியன் பிரதேச பேரவையின் 70 இடங்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எதிா்ப்பு

தெலங்கானா மாநிலத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களை இணைத்ததற்கு மத்திய உள்துறை இணை அமைச்ச... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறியவா்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டது தவறான நடவடிக்கை என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதா... மேலும் பார்க்க

விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - ஜகதீப் தன்கா்

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க