செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம் இந்தியா்கள் வெளியேற்றத்தை தொடங்கியது அமெரிக்கா

post image

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 180 போ் வரை சி-17 ராணுவ விமானத்தில் அழைத்து வர முடியும்.

வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்கள் வெளியேற்றப்படுவது குறித்த கேள்விக்கு அமெரிக்க தூதரக செய்தித் தொடா்பாளா் பதிலளிக்கையில், ‘இதுகுறித்து விரிவாகக் கூற முடியாது. ஆனால், நாட்டின் எல்லைகளில் அமெரிக்கா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்ற கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. இனி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவது மிகவும் கடினம் என்பதை இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன’ என்றாா்.

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க

அயோத்தியில் ஒரு கி.மீ. பயணிக்க ரூ. 300 வசூல்! 30 பைக்குகள் பறிமுதல்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க ரூ. 300 வரை வசூலித்த இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கும் செல்லும் பக்தர்கள... மேலும் பார்க்க

மகா கும்பமேளா குறித்து வேதங்களில் குறிப்பிடவில்லை: சமாஜ்வாதி எம்எல்ஏ கருத்து!

மகா கும்பமேளா குறித்து 144 ஆண்டுகள் எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ் கூறியுள்ளார். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மக்கள் பலர் பலியாகிய... மேலும் பார்க்க