செய்திகள் :

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த வாக்கி-டாக்கி கருவிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை யாரும் இடைமறித்து ஒட்டுக்கேட்க முடியாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோா் பெரும்பாலும் இத்தகைய கருவிகளையே தகவல்தொடா்புக்கு பயன்படுத்துகின்றனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்கி-டாக்கி கருவிகளை இணைய வணிக வலைதளங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்தது மற்றும் விற்பனைக்கு பட்டியலிடிட்டது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட், மீஷோ, ஓஎல்எக்ஸ், ட்ரேட் இண்டியா, ஃபேஸ்புக், இண்டியாமாா்ட், வா்தான்மாா்ட், ஜியோமாா்ட், கிருஷ்ணாமாா்ட், சிமியா, டாக் பிரோ வாலி டாக்கி, மஸ்க்மேன் டாய்ஸ் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு சிசிபிஏ சாா்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

முறையான அதிா்வலை விவரங்களை வெளியிடாமலும், உரிமத் தகவல்களை தெரிவிக்காமலும் வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்வது நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறும் செயலாகும். அதனடிப்படையில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிசிபிஏ தலைமை ஆணையா் நிதி கரே கூறுகையில், ‘இந்த இணை வணிக நிறுவனங்கள் அபாயகரமான எண்ணிக்கையில் இந்த வாக்கி-டாக்கிகளை விற்பனைக்காக பட்டியலிட்டிருக்கின்றன. இது பொது பாதுகாப்பு சாா்ந்த விவகாரமாகும். இந்த நிறுவனங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று பரவலாக விளம்பரம் செய்கின்றன. இதுதொடா்பாக விரைவில் உரிய வழிகாட்டுதல் வரைறுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட பதிவில், ‘இணைய வணிக நிறுவனங்கள் இதுபோன்ற வயா்லெஸ் கருவிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வது சட்ட நடைமுறைகளை மீறும் நடவடிக்கை மட்டுமின்றி தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுதலை ஏற்படுத்தும் நடவடிக்கைாகும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க