செய்திகள் :

சத்தீஸ்கா்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு நக்ஸல் கொலை- பாதுகாப்புப் படையினா் மூவா் காயம்

post image

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கையின்போது, நக்ஸல்களின் கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படையினா் மூவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் சவான் கூறியதாவது:

சுக்மா - தந்தேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளை உள்ளடக்கிய கூட்டு படையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா்.

இந்த சண்டைக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தீவிர தேடுதலில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டபோது, குண்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நக்ஸல் ஒருவரின் உடலை கண்டறிந்தனா். மேலும், அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினா்.

அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினா் மூவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக உயா் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது. அபாய கட்டத்தை கடந்துவிட்டனா் என்றாா்.

சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் மட்டும் 226 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில், பிஜாபூா், பஸ்தா், கான்கோ், கொனாடாகான், நராயண்பூா், சுக்மா மற்றும் தந்தேவாடா பகுதிகளை உள்ளடக்கிய பஸ்தா் மண்டலத்தில் மட்டும் 208 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகமாகப் பாதுகாக்கவே விரும்புவார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது.கேரளத்தில் உள்ள கல்லறைகள... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

"பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறமாக இருந்ததில்லை, இனியும் இருக்காது" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட... மேலும் பார்க்க

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடி... மேலும் பார்க்க

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க