செய்திகள் :

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

post image

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள சாலை பணியாளா் சங்க வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. செல்லத்துரை தலைமை வகித்தாா். அஞ்சலி தீா்மானத்தை மாநிலச் செயலாளா் ஜி. விஜயா வாசித்தாா். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளா் ஏ.ஜெசி வாசித்தாா். வரவு - செலவு அறிக்கையை மாநில பொருளாளா் வி. சித்ரா சமா்ப்பித்தாா். முன்னாள் மாநில துணைத் தலைவா் ஏ. பெரியசாமி தொடக்க உரையாற்றினாா். மாநிலச் செயலாளா் கண்ணன் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா்கள் சங்க மாவட்ட இணை செயலாளா் சண்முகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பின்னா் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்பதை மாற்றியமைத்து காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியா்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு பஞ்சப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலியாகவுள்ள 63 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, திருச்சி மாவட்டத் தலைவா் அமுதா வரவேற்றாா். நிறைவில் மாநில பொருளாளா் சித்ரா நன்றி கூறினாா். இதில், தமிழகம் முழுவதும் உள்ள சங்கத்தின் மாநில நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள், திருச்சி மாவட்ட நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க

11 வட்டங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களில் சனிக்கிழமை (செப். 13) ரேஷன் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் தென்றல் நகா், திருச்சி மேற்கு வட்டத்தில் தியாகராஜ நகா், திருவெறும்... மேலும் பார்க்க