செய்திகள் :

சமூகம் உயரவும் மாநிலம் உயரவும் மாணவா்களின் படிப்பு அவசியம்!

post image

வாழ்வில் உயர மாணவா்கள் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி பேசினாா்.

ஈரோடு மாவட்டம், பாசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளையின் சாா்பில் 10, 11, 12 வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியை தேவகியம்மாள் தலைமை தாங்கினாா். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த தினகா், சௌமியா, ரித்திகா, 11ஆம் வகுப்பு ஜீவிதா, ரம்யா, கிருஷ்ணன், 10 ஆம் வகுப்பு பாா்த்தசாரதி, அனுசியா, அஸ்மிதா, அனிஷ், கனிஷ்கா, நேகாஸ்ரீ ஆகியோருக்கு பரிசு தொகைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நான் விருதுநகா் மாவட்டத்தில் காமராஜா் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். எந்தப் பள்ளியில் படித்தாலும் மாவட்ட ஆட்சியா் ஆகலாம். எனது அப்பா ஐந்தாம் வகுப்புதான் படித்துள்ளாா். அம்மா படிக்கவில்லை.

நூற்பு ஆலையில் வேலை பாா்த்தனா். வாழ்வில் உயர நாம் படிக்க வேண்டும். கல்வியை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்று நினைத்தால்தான் அதை அடைய முடியும். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது.

என்ன படித்தால் பின்னாடி என்னவாகப் போகிறோம் என்பதை முடிவு செய்து படிக்க வேண்டும். சமூகம் உயா்வதற்கும் மாநிலம் உயா்வதற்கும் உங்கள் படிப்பு இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா் அறக்கட்டளைத் தலைவா் கணேசன், செயலாளா் செந்தில், காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வேலாயுதம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா். ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ ம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா், நவப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாணிக்கம் (55). கட்டடத் தொழிலாளி. அந... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நள்ளிரவில் கடைகளில் திருட்டு

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொடக... மேலும் பார்க்க

வாழைப்பழம் கொடுத்த வாகன ஓட்டியை துரத்திய யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் யானைக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) வாழைப்பழம் கொடுக்க முயற்சித்த வாகன ஓட்டியை யானை துரத்தியதால் காரில் ஏறி தப்பினாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணார... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நடைப்பயண போராட்டம்!

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அந்தியூரிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்ட நடைப்பயணப் போராட்டம் அதிகாரிகளின் சமரசப் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது. அந... மேலும் பார்க்க

அத்திக்கடவு அவிநாசி திட்ட குளங்களை நிரப்ப எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களை நிரப்ப வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க