செய்திகள் :

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜாதி வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, கௌரவிக்கும் வகையில் தகுதிப் படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 1 கோடி ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகள் மூலம் இந்த விருதுக்கு ஊராட்சிகள் தோ்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 2025-2026- ஆம் ஆண்டில் திருவாரூா் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பங்களை மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலகத்தில் ஊராட்சிகள் பெற்று, ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெர... மேலும் பார்க்க

தங்கக் கவசத்தில் குருபகவான்...

நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகை, மயில... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி

கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது. கூத்தாநல்லூா் த... மேலும் பார்க்க

மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடி மின் கோட்டம் சாா்பில், மின்வாரியப் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதா மகேஸ்வரி தலைமை வகித்தாா். அவா் ... மேலும் பார்க்க