செய்திகள் :

சம்பலில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த தடையில்லை, ஆனால்.. !

post image

உத்தரப் பிரதேசத்தின், சம்பலில் பாரம்பரிய தொழுகையை நடத்துவதில் எந்த தடையும் இல்லையென்றாலும், கூடாரங்கள் மற்றும் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடித் தொழுவதைத் தடை செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர்,

அமைதியான முறையில் தொழுகை நடத்துவதை உறுதி செய்யும் வகையில் துறை மற்றும் மண்டல ரீதியாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடாரங்கள் அமைத்து கூட்டமாகத் தொழுகையில் ஈடுபடுவது விபத்து மற்றும் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால், பலர் ஒன்றுகூடி ஒரே இடத்தில் தொழுகை நடத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடிய காரணங்களாலும் சாலைகளில் தொழுகை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆனால், மசூதிகளில் பாரம்பரிய முறையில் தொழுகை நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, மேலும் அவை பாரம்பரியத்தின் படி அமைதியாக நடத்தப்படும். மேலும் சிறிய ஒலிபெருக்கிகள் கொண்ட மசூதிகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தங்கள் நடைமுறையைத் தொடரலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சில ஆண்டுகளாக, சாலைகளில் தொழுகை நடத்தப்படாமல் அதிகாரிகள் உறுதி செய்து வருவதாகவும், இந்த விதி இந்த ஆண்டும் மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பலில் கடந்தாண்டு நிகழ்ந்த சம்பவம்..

சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனர்; பலா் காயமடைந்தனர். இதையடுத்து, சம்பல் வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனர். இதனால் சம்பலில் இன்னுமும் தொடர் பதற்றம் இருந்துகொண்டுதான் உள்ளது.

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க