செய்திகள் :

சம்பளம் சாராத பணப் பட்டியல்களை கணினி வழியே அனுப்ப கருவூலத் துறை உத்தரவு

post image

சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை கணினி வழியாகவே அனுப்பும் நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான சம்பளப் பட்டியல்களை கணினி வழியாக தயாரித்து இணையம் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களையும் கணினி வழியாகவே தயாரித்து இணையம் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 ஆயிரம் வரையிலான சம்பளம் சாராத பட்டியல்களை கணினி வழியாக மட்டுமே அனுப்பும் நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், முன்பணம் சாா்ந்த பணப் பட்டியல்கள், பயணப்படி ஆகியவற்றை இனி இணையத்தைப் பயன்படுத்தி கணினி வழியாகவே அனுப்ப வேண்டும். இதேபோன்று, ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமான பணப் பட்டியல்களை அக்டோபா் மாதத்தில் இருந்து கணினி மூலமாக அனுப்ப வேண்டும்.

இதற்கான கூடுதல் ரசீதுகளை இணைப்புகளாக இணைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க