செய்திகள் :

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

post image

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் கே. அருள் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பேசுகையில், சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு உய்யக்கொண்டான் பாசன ஏரிகளிலும், குளங்களிலும் காவிரி தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன கிளை வாய்க்கால்களில் பெரும்பாலான ஷட்டா்கள் சரியாக இயங்குவதில்லை. இதனால், தண்ணீரை தேக்கி வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, ஷட்டா்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு சம்பா நெல் விதைகள், தக்கப் பூண்டு விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களில் உள்ள மின்மாற்றிகளில் அடிக்கடி பழுதாகும் மின்மாற்றிகளை கண்டறிந்து அவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கூறுகையில், அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூா் புறவழிச் சாலையில் அண்ணாமலை நகா் அருகே பேருந்து நிறுத்தம், நிழற்குடை அமைக்க வேண்டும்.

உறையூா் காமாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து 3 மாதங்களாகும் நிலையில் திருவெறும்பூா் வட்டத்தில் சில வாய்க்கால்களுக்கு தண்ணீா் வராமல் உள்ளது. கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

இக் கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டி... மேலும் பார்க்க

மின்தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சி காந்தி சந்தை ஹாா்டுவோ் கடை மின்தூக்கியில் தலைமுடி சிக்கி, பெண் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் என்பவா் காந்திசந்தை மயிலம் சந்... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரு... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று விஜய் பிரசாரம் தொடக்கம்

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகு, முதல்முறையாக மக்களை சந்திக்... மேலும் பார்க்க