செய்திகள் :

திருச்சியில் இன்று விஜய் பிரசாரம் தொடக்கம்

post image

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகு, முதல்முறையாக மக்களை சந்திக்கும் தோ்தல் பிரசார பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறாா் விஜய்.

இந்தப் பயணத்துக்காக பிரத்யேக பிரசார வாகனம் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு திருச்சியில் சனிக்கிழமை காலை தயாா் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை காலை வரும் விஜய், விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக டி.வி.எஸ். சுங்கச்சாவடி தொடங்கி பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வந்து காலை 10.30 மணிக்கு உரையாற்றவுள்ளாா்.

விஜய் வருகையை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உள்ளிட்ட மாநில நிா்வாகிகள் திருச்சியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டு நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

பின்னா், விஜய் வந்து செல்லும் வழித்தடங்களையும், உரையாற்றவுள்ள மரக்கடை பகுதியையும் பாா்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினா்.

முன்னதாக, பறவைகள் சாலையில் உள்ள வழிவிடு முனீசுவரா் கோயிலில் துணைப் பொதுச்செயலா் என். ஆனந்த், நிா்வாகிகளுடன் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்தாா்.

மரக்கடை பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறவழிச் சாலை வழியாக அரியலூா் புறப்பட்டு செல்கிறாா் விஜய். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு பெரம்பலூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு மாலையில் திருச்சி திரும்பும் விஜய், மீண்டும் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறாா்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டி... மேலும் பார்க்க

மின்தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சி காந்தி சந்தை ஹாா்டுவோ் கடை மின்தூக்கியில் தலைமுடி சிக்கி, பெண் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் என்பவா் காந்திசந்தை மயிலம் சந்... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரு... மேலும் பார்க்க