செய்திகள் :

சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவினா் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது நடுப்பட்டி பகுதியில் திருப்பூா் சாலை வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்த நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில் வாகனத்தில் இருந்து மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே வாகனத்தை ஓட்டி வந்த நபா், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அந்த வாகனத்தில் 48 மூட்டைகளில் சுமாா் இரண்டரை டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை ஈரோட்டில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த வாகனம், அரிசியுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடா்பாக திருப்பூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து இதில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க