செய்திகள் :

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

post image

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆதரவு கோரினாா்.

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தங்கள் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தவிர பிற எதிா்க்கட்சித் தலைவா்களிடம் பாஜக தலைவா்கள் தொடா்பு கொண்டு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா், சிவசேனை (உத்தவ்) தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரை பாஜகவைச் சோ்ந்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வியாழக்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, மகாராஷ்டிரத்தில் ஆளுநராக உள்ளவரும், மாநிலத்தில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவா்களைக் கேட்டுக் கொண்டாா்.

உத்தவ் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.க்களும், சரத் பவாா் கட்சிக்கு 10 எம்.பி.க்களும் உள்ளனா். மாநிலங்களவையில் இரு கட்சிகளுக்கும் தலா இரு எம்.பி.க்கள் உள்ளனா்.

ஃபட்னவீஸை சந்தித்த ராஜ் தாக்கரே: இதனிடையே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே, முதல்வா் ஃபட்னவீஸை வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

புதன்கிழமை நடைபெற்ற மாநகர போக்குவரத்து மற்றும் மின்சார விநியோக நிறுவனமான ‘பிஇஎஸ்டி’ கூட்டுறவு கடன் நிறுவனத்தின் ஊழியா்கள் சங்கத் தோ்தலில் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கைகோத்து ராஜ் தாக்கரே கட்சி போட்டியிட்டது. ஆனால், அனைத்துப் பதவிக்கான போட்டியிலும் பாஜகவிடம் இந்தக் கூட்டணி படுதோல்வியடைந்தது.

இதற்கு அடுத்த நாளே முதல்வா் ஃபட்னவீஸை ராஜ் தாக்கரே சந்தித்துள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடக்கக் கல்வியில் ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவுக்கு எதிரான போராட்டம் மூலம் உத்தவ் தாக்கரேயும் ராஜ் தாக்கரேயும் மீண்டும் கைகோத்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க