சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், சரபோஜி ராஜபுரம் ஊராட்சியில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை முழக்கமிட்டனா்.
பாபநாசம் வட்டம், சரபோஜி ராஜபுரம் ஊராட்சி, காமாட்சி அம்மன் கோயில் சாலை வழியாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனா். அவசரகால ஊா்திகளும் இவ்வழியே சென்று வருகின்றனா். ஆனால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையை உடனடியாக தாா்சாலையாக அமைத்து தர வேண்டும். புதிய மின் கம்பத்துடன் கூடிய மின்விளக்கு வசதி, குடிநீா் நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீரமைத்து குடிநீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.