செய்திகள் :

``சரியாகப் படிக்கவில்லை..'' - வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

post image
ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவர் பொதுத்துறைப் பிரிவில் கணக்காளராகப் பணிபுரிகிறார். மார்ச் 14 அன்று குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பிறகு இந்த துயரமான சம்பவத்தைச் செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்ப்பவரம் காவல் நிலையத்தில் கிஷோரின் மனைவி ராணி அளித்த புகாரில், தனது கணவர் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், தன் இரு மகன்களும் வாளியில் உயிரற்ற நிலையில் கிடந்ததாகவும் கூறி இருந்தார். இதனை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குற்றம்

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை குறிப்பைக் கண்டறிந்த போலீசார், அதில் “கிஷோர் தன் இரு மகன்களும் குறைவான கல்வித் திறமையையே கொண்டுள்ளார்கள். இதனால் அவர்கள் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் போராடுவதற்கு சிரமப்படுவார்கள் என்று எண்ணி தன் மகன்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது” என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து வருவதாகவும், குழந்தைகள் யுகேஜி மற்றும் 1 ஆம் வகுப்பு மட்டுமே படித்து வருவதால், இந்தச் செயல் குழந்தைகளின் கல்வித் திறனுடன் தொடர்புடையது என்பதற்கான விளக்கம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில்

கடந்த 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட் மற்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கடுத்து சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து இன்று (மார... மேலும் பார்க்க

விழுப்புரம்: ஆசிரியை அடித்ததால் மயங்கி விழுந்த மாணவர்; 2 ஆசிரியைகள் மீது நடவடிக்கை.. நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளியை முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

TNBudget 2025: 'பட்ஜெட்டில் 'ரூ' மாற்றம் எதற்கு?'- முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது.தமிழ்ப்பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ... மேலும் பார்க்க

அடையாறு சீரமைப்பு: `மீண்டும் ரூ.1500 கோடி' - ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி; என்னதான் நடக்கிறது?

மனித வரலாற்றில் ஒவ்வொரு நதியுமே ஒவ்வொரு கலாசாரத்தின் தோற்றுவாயாகச் செயல்படுகிறது. நதிக்கும் மனித மரபுகளுக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. அப்படிப்பட்ட ஒரு நதிதான் சென்னையின் அடையாளமான அடையாறு. இன்றை... மேலும் பார்க்க

`ஸ்டாலினாலும் வைகோவாலும் நான் இழந்தது நிறைய..!' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஓப்பன் டாக்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்திலிருப்பவர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி.,என எந்தப் பதவியையும் வகித்ததில்லை. ”வேற ஒருத்தனாஇருந்தா இந்நேரத்துக... மேலும் பார்க்க

'ஏஐ தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் சீனா' - இந்தியாவின் நிலை என்ன?

சமீபத்தில் டீப்சீக் என்ற நுண்ணறிவு செயலியை சீனா அறிமுகம் செய்தது. இது சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதற்கு அதுவரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா மட்ட... மேலும் பார்க்க