செய்திகள் :

சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்ட கௌதம் ராம் கார்த்திக்..!

post image

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தன் மீதான் சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்டு, அதற்கான விளக்கமும் அளித்துள்ளார்.

நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சமீபத்தில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என மாற்றினார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2013-இல் கடல் படத்தில் அறிமுகமானார்.

முதல்படமே தோல்விப் படமாக அமைந்தது. இருப்பினும் அடுத்து வை ராஜா வை படத்தின்மூலம் மீண்டார். ரங்கூன், இருட்டு அறையில் முரட்டு குத்து படங்கள் வெற்றிப் பெற்றன.

முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் நடிக்கும்போது மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்தார்.

சமீபகாலமாக இவரை இயக்குநர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தனது புதிய மேலாளர் பெயரைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்குத் தொடர்ச்சியாக வரும் சில பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக பலரும் என்னைத் தொடர்புகொள்ள முயன்று முடியாமல் போனதாகக் கூறினார்கள். இந்தக் குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைக் கூறுகிறேன்.

2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து என்னுடைய மேலாளராக கோபிநாத் திரவியம் இருக்கிறார்.

என்னைத் தொடர்புகொள்வதில் யாருக்காவது சிரமம் ஏற்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து வேலை செய்ய காத்திருக்கிறேன்.

Letter shared by Gautam Ram Karthik.
கௌதம் ராம் கார்த்திக் பகிர்ந்த கடிதம்.

Actor Gautham Ram Karthik has apologized for the controversies surrounding him and provided an explanation.

இந்தியாவில் ஹாக்கி போட்டிகள்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது. பல்வேறு நாடுகள் பங்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். பாக்ஸிங் வோ்ல்ட... மேலும் பார்க்க

சங்கா், ஷ்ரியன்ஷி வெற்றி

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சங்கா் முத்துசாமி, ஷ்ரியன்ஷி வலிஷெட்டி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், சங்கா் முத்துசாமி 23-21, 21-12 என்ற கேம்களில்,... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: அரையிறுதியில் எஸ்ஆா்எம், ஐஓபி அணிகள்

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டியில் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியும், ஆடவா் பிரிவில் ஐஓபியும் தகுதி பெற்றுள்ளன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட சங்கம் ச... மேலும் பார்க்க

அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்க... மேலும் பார்க்க