செய்திகள் :

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

post image

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.

இதையும் படிக்க: இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

அவர் முதல் முறையாக கடந்த 2023 ஆம் ஆண்டில் ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், மீண்டும் ஐசிசியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஹாசிம் ஆம்லா கூறுவதென்ன?

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு ஷுப்மன் கில் என்ற மிகச் சிறந்த வீரர் கிடைத்துள்ளார். அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக சில ஆண்டுகளாக அந்த வேலையை ரிஷப் பந்த் சிறப்பாக செய்து வருகிறார். தென்னாப்பிரிக்க அணிக்காக ரியான் ரிக்கல்டான் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாட்டின் அணிகளுக்கும் 2-3 சிறப்பான வீரர்கள் கிடைப்பார்கள்.

இதையும் படிக்க: கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்: வெங்கடேஷ் ஐயர்

அதேபோல, ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு சிறந்த இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் உருவாகிறார். அந்த வகையில் ஷுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்து மிகப் பெரிய வீரராக உருவெடுத்துள்ளார். ஷுப்மல் கில் மிகவும் அற்புதமான வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மிகவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்திய அணிக்காக முன்வரிசையில் ஷுப்மன் கில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிரணிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். அடுத்து 3-வது இடத்தில் விராட் கோலியும் இருக்கிறார் என்றார்.

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க