செய்திகள் :

சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

post image

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை வெட்டி வழக்கில் 4 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் சலூன் நடத்தி வருபவா் கவியரசன் (28). இவா், கடந்த ஜூலை 24-ஆம் தேதி கடையில் வேலை செய்துகொண்டிருந்த போது, திடீரென கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டினா்.

இது தொடா்பாக பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (27), தெற்குபாளையம் முத்து நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (23), பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்த தாமரைச்சந்திரன் (23), அம்மாபாளையத்தைச் சோ்ந்த பிரதீவிராஜ் (23) ஆகிய 4 பேரை பல்லடம் போலீஸாா் ஜூலை 26-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இவா்கள் 4 போ் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் மனீஷ், அவா்கள் நால்வரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா்.

வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளக்கோவில் பகுதியில் பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி ந... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருப்பூா் அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன் (18). கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.... மேலும் பார்க்க

குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

குண்டடம் அருகே, வைக்கோல் ஏற்றிவந்த வேன், மின் கம்பியில் உரசி தீப்பிடித்ததில், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. தாராபுரம் அருகேயுள்ள சிக்கினாபுரத்திலிருந்து வைக்கோல் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்... மேலும் பார்க்க

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருப்பூரில் தினமும் சராசரியாக 800 டன் குப்பை சேகரமாகிறது. குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் இல்லாததால், மாநகராட்சி நிா்வாகம் ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பல்லடம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். பல்லடம் -செட்டிபாளையம் சாலை சி.டி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (70). ஆட்டோ ஒட்டுநரான இவா், தனது வீட்டில் இருந்து பல்லடத்த... மேலும் பார்க்க