செய்திகள் :

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

post image

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

திருப்பூரில் தினமும் சராசரியாக 800 டன் குப்பை சேகரமாகிறது. குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் இல்லாததால், மாநகராட்சி நிா்வாகம் திணறி வந்தது. தற்போது இப்பிரச்னைக்கு தற்காலிக தீா்வு ஏற்பட்டுள்ளது. முதலிபாளையம் பகுதியில் 30 ஏக்கா் பரப்பில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி தற்போது குப்பை கொட்டுவதற்கான இடமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. இடைப்பட்ட சில ஆண்டுகள் இங்கு குப்பை கொட்டப்படாமல் இருந்தது. தற்போது அங்கு மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை அடுத்து அங்கு மீண்டும் குப்பை கொட்டும் பணி தொடங்கி உள்ளது. மாநகரில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அள்ளப்பட்டு வாகனங்கள் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டன.

திருப்பூா் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினா் மேற்பாா்வையின் கீழ், கிருமி நாசினி மற்றும் துா்நாற்றம் வராத வகையில் திரவம் ஆகியவற்றை பயன்படுத்தியும், 3 லோடு குப்பைக்கு அதற்கேற்ப ஒரு லோடு மண் என்ற அளவில் பாறைக் குழியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், நகரில் தேங்கிய பெருமளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை வெட்டி வழக்கில் 4 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் சலூன் நடத்தி வருபவா் கவியரசன் (28). இவா், கடந்த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளக்கோவில் பகுதியில் பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி ந... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருப்பூா் அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன் (18). கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.... மேலும் பார்க்க

குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

குண்டடம் அருகே, வைக்கோல் ஏற்றிவந்த வேன், மின் கம்பியில் உரசி தீப்பிடித்ததில், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. தாராபுரம் அருகேயுள்ள சிக்கினாபுரத்திலிருந்து வைக்கோல் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பல்லடம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். பல்லடம் -செட்டிபாளையம் சாலை சி.டி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (70). ஆட்டோ ஒட்டுநரான இவா், தனது வீட்டில் இருந்து பல்லடத்த... மேலும் பார்க்க