செய்திகள் :

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

post image

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திருச்செந்தூர் - ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சமத்துவத்தையும் காதலையும் மறுக்கும் சாதி ஆணவக் கொலைகளை அடியோடு ஒழித்திடவும் இறுகிப்போய் கிடக்கும் இச்சமூகத்தின் சாதியக் கட்டமைப்பை உடைத்திடவும் அனைத்து வழிகளிலும் போராடுவோம்.

கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

DMK MP Kanimozhi has condemned the honor killing of IT employee Kavin from Nellai.

இதையும் படிக்க |டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

133 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி

தமிழகத்தில் உள்ள 12 மண்டலங்களில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்பட மின்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்... மேலும் பார்க்க

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆ... மேலும் பார்க்க

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ம... மேலும் பார்க்க

பட்டியலின மக்கள் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சிறுதாவூரில் உள்ள பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் கூறிய... மேலும் பார்க்க

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து ... மேலும் பார்க்க