செய்திகள் :

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: அரசு சாட்சியாக மாற விரும்பும் காரணங்களை பட்டியலிட்டு காவலா் ஆய்வாளா் மனு

post image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா், அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் சட்டவிரோதக் காவலில் வைத்துத் தாக்கினா். இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா். இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தனது பிணை மனுக்கள் தொடா்ந்து நிராகரிக்கப்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த மனுவில், அரசு சாட்சியாக மாறி அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க விரும்புவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரா் அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களை மனுவாகத் தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணை ஜூலை 31-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மனு மீதான விசாரணை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமாா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீதா் அரசு சாட்சியாக மாற விரும்புவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு 17 பக்கங்கள் கொண்ட மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது வருகிற 4-ஆம் தேதி முடிவெடுக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தா... மேலும் பார்க்க

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவ... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க