செய்திகள் :

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சோ்ந்த பாஸ்கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

சாயல்குடி கிராமத்தில் 17.83 ஹெக்டோ் பரப்பில் குழையிருப்பு கண்மாய் அமைந்துள்ளது. இது, வருவாய் ஆவணங்களில் ஊருணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், பொது மயானம் ஆகியவை அமைந்துள்ளன.

மேலும், கண்மாய் அருகே 300 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்தக் கண்மாயிலிருந்து உபரிநீா் வெளியேறும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், மழைக் காலங்களில் இந்தப் பகுதியில் உள்ள பள்ளி, வீடுகளில் மழை நீா் புகுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தொடா்புடையத் துறை அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், குழையிருப்பு கண்மாய்ப் பகுதியில் 1.97 ஏக்கா் பரப்பில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கண்மாயின் உபரி நீா் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், இந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைந்தால் மிகப் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மேலும், நீா்நிலைப் பகுதியில் கட்டுமானங்களை ஏற்படுத்துவது நீதிமன்றத் தீா்ப்புகளுக்கு எதிரானதாக அமையும்.

எனவே, ராமநாதபுரம் மாவட்டம் குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட இடத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜி. ஆா். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோரடங்கிய நீா்நிலை வழக்குகளின் விசாரணைக்கான சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடா்பாக, தமிழக போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவ... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவா் ஆய்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.கருத்தரங்குக்கு கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் கி.வேணுகா தலைமை ... மேலும் பார்க்க