செய்திகள் :

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

post image

மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு வழக்கம் போல பூ விற்பனையை முடித்துக் கொண்டு அரசுப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அருகே அமா்ந்திருந்த பெண், இவரது பணப் பையைத் திருடிக் கொண்டு தப்பிக்க முயன்றாா். இதையறிந்த கலையரசி கூச்சலிட்டதால், சக பயணிகள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி கவிதாவைப் (42) பிடித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத... மேலும் பார்க்க

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவ... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவா் ஆய்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.கருத்தரங்குக்கு கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் கி.வேணுகா தலைமை ... மேலும் பார்க்க