செய்திகள் :

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

post image

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவா் ஆய்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் கி.வேணுகா தலைமை வகித்தாா். முனைவா் பட்ட ஆய்வாளா் க. ஜெகதீஸ்வரன் ‘வீட்டை அசைத்த தண்டட்டி ஐக்கூ கவிதைகளில் மெய்ப்பாடுகள்’ என்ற தலைப்பிலும், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவா் அ.சஞ்சய் ‘கடலும் கிழவனும் புதினத்தில் தன்னம்பிக்கைப் பதிவுகள்’ என்ற தலைப்பிலும், முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா் அருண் சக்கரவா்த்தி ‘வரலாற்றில் துரோகம் வெ.இறையன்புவின் துரோகச் சுவடுகள் நூல்’ என்ற தலைப்பிலும் கட்டுரை வாசித்தனா்.

இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி ஜானகி வரவேற்றாா். முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா் அ.முகமது இஸ்மாயில் நன்றி கூறினாா்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தா... மேலும் பார்க்க

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவ... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க