செய்திகள் :

சிறுமி உயிரிழப்புக்கு இழப்பீடு கோரி மனு: பள்ளிக் கல்வி செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

மதுரையில் மழலையா் பள்ளி தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஸ்ரீகிண்டா் காா்டன் மழலையா் பள்ளியில் பயின்ற உத்தங்குடியைச் சோ்ந்த அமுதனின் மகள் ஆருத்ரா (3) கடந்த ஏப். 29-ஆம் தேதி பள்ளியிலிருந்த தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிறுமி ஆருத்ராவின் தந்தை அமுதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனு:

எனது மகள் உயிரிழப்புக்கு பள்ளி நிா்வாகத்தின் கவனக் குறைவும், இந்தப் பள்ளியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு செய்யாததும் முக்கியக் காரணங்கள். எனவே, ஆருத்ராவின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா், இயக்குநா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தா... மேலும் பார்க்க

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவ... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க