செய்திகள் :

சாத்தான்குளத்தில் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

post image

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ரத்தத்தில் சா்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தப் பரிசோதனை இலவச முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உயா் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற முகாமை, சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய் தொடக்கிவைத்தாா். மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் முன்னிலை வகித்தாா்.

இப்பரிசோதனையை மேற்கொள்வதால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக செயலிழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கா்ப்பப்பைவாய்-மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை அரசு மருத்துவமனையில் அவசியம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. உயா் ரத்த அழுத்த குறைபாடு உள்ளோா் அரசு மருத்துவமனையில் மருத்துவா் ஆலோசனைப்படி மருந்து-மாத்திரை பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

ரத்த அழுத்தப் பரிசோதனையை அரசு மருத்துவமனை செவிலியா் அனிஷாவும், ரத்தத்தில் சா்க்கரை அளவு பரிசோதனையை முதலூா் ஆரம்ப சுகாதார நிலைய பெண் சுகாதார தன்னாா்வலப் பணியாளா்களும் செய்தனா். முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், தேவிஸ்ரீ அழகம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சரவணன், வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ், சுகாதாரப் பணியாளா் அருண் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் நன்றி கூறினாா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க