முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணன். ஊரில் விவசாயம் செய்து வந்த இவா், தற்போது சென்னையில் வேலை செய்து வருகிறாா்.
இவரது மனைவி பூா்ணிமாதேவி, 3 மகன்கள் இங்கு வசித்தனா். இந்த நிலையில், தனது குடும்பத்தினரையும் சென்னைக்கு அழைத்து செல்ல முத்துக்கண்ணன் முடிவு செய்தாா். ஆனால், அவரது மூத்த மகன் இஷாந்த் (14) சென்னை செல்ல விரும்பவில்லை. இதனால்,
பூச்சி மருந்தைக் குடித்து மயங்கினாா். அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி இஷாந்த் உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.