செய்திகள் :

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரை தலைமையிடமாக கொண்ட மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை உரிமம் பெற்று பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலை

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு.

இன்று விடுமுறை நாளிலும் விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உராய்வின் காரணமாக திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக பட்டாசு ஆலையின் அறைகள் வெடித்து சிதற துவங்கியுள்ளது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதில் சுமார் 16 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ளது. மேலும் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்ததால் அப்பகுதியே கரும்புகையால் சூழ்ந்து காணப்பட்டது.

தரைமட்டமான அறை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின் மீட்புபணியின் போது சாத்தூர் பனையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவரின் உடல் சிதிலமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராகேஷ் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிவிபத்தால் ஏற்பட்ட புகை

பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது குறித்து ஆலை உரிமையாளர் கணேசன், மேலாளர், மற்றும் 2 போர்மேன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் போர்மேன் லோகநாதனை கைது செய்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் இரண்டு விபத்து.

இதே சாத்தூர் பகுதியில் கடந்த ஜூலை 1ஆம் தேதி சின்னகாமன்பட்டியில் கோகுலேஷ் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க

ஊட்டி: மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், அலறித்துடித்த பயணிகள்! என்ன நடந்தது?

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 22 பேர் துக்க நிழவு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் வாடகை வேன் மூலம் நேற்று காலை ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு குன்னூர் மலை... மேலும் பார்க்க

Kerala: மருத்துவமனை இடிந்து பெண் பலி; ``ஆபரேஷன், சிகிச்சை வசதி எங்கும் இல்லை'' - காங்கிரஸ் கண்டனம்

கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 68 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடத்தின் டாய்லெட் பகுதி நேற்று உடைந்து விழுந்தது. டாய்லெட்டில் குளிக்கச் சென்ற தலையோலப்பறம்பு பகுதியைச் சேர... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெட... மேலும் பார்க்க

தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?

நேற்று காலை, 8.15 - 9.35 மணியளவில், தெலங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் இருந்த ரியாக்டர் வெடித்தது தான் இந்த விபத்திற்... மேலும் பார்க்க

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? - மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் த... மேலும் பார்க்க