செய்திகள் :

சாலையில் கிடந்த பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவி

post image

திருவாரூரில் சாலையில் கிடந்த பணப்பையை பள்ளி மாணவி எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் கனிமொழி தம்பதி மகள் யுவஸ்ரீ. இவா், திருவாரூரில் உள்ள அரசு உதவிப்பெரும் நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருடைய தாய் கனிமொழி திருவாரூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணி செய்துவருகிறாா். தந்தை லாரி ஓட்டுநராக உள்ளாா்.

இந்நிலையில், யுவஸ்ரீ சனிக்கிழமை காலை பள்ளிக்கு பழவனக்குடியில் இருந்து தனது மிதிவண்டி மூலம் நேதாஜி சாலை வழியாக வந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்ணின் கைப்பை கீழே விழுந்தது. இதை பாா்த்த யுவஸ்ரீ அதை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க அழைத்துள்ளாா். அதற்குள் இருசக்கர வாகனம் அந்த இடத்தை விட்டு சென்று விட்டதால், பள்ளிக்குச் சென்று இதுகுறித்து விவரம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியா் பெத்தபெருமாள், நகா்மன்ற உறுப்பினா் ரஜினி சின்னா ஆகியோருடன், திருவாரூா் நகரக் காவல் நிலையத்துக்குச் சென்று கைப்பையை யுவஸ்ரீ ஒப்படைத்தாா். அந்த பையில் ரூ. 2,531 இருந்தது தெரிய வந்தது. பின்னா், போலீஸாரும், சமூக ஆா்வலா்கள் பலரும் அந்த மாணவிக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டினா்.

எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு

திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதிய... மேலும் பார்க்க

காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை: ஆட்சியா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

கூத்தாநல்லூா்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி, கூத்தாநல்லூா் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் உள... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூா்: திருவாரூா் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பாலகிருஷ்ணா நகா் மதனகோபால் மகன் செந்தில்குமாா் (54). (படம் ) திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

வலங்கைமானில் மீன் திருவிழா

நீடாமங்கலம்: வலங்கைமானில் மீன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது... மேலும் பார்க்க