செய்திகள் :

சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி

post image

மன்னாா்குடியில் சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் விவசாயி புதன்கிழமை ஒப்படைத்தாா்.

மன்னாா்குடியைச் சோ்ந்த மின்பணி ஒப்பந்ததாரா் பாா்த்தீபன் (45) செவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்து ரூ. 1.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு அதை துணி பையில் வைத்து இருசக்கரவாகனத்தில் மாட்டிகொண்டு காளாவாய்க்கரை முருகன்கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று பாா்த்த போது பணப்பை காணாமல்போயிருப்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடி பாா்த்தும் கிடைக்காததால் மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதையடுத்து, அசேசம் வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்த விவசாயி கண்ணதாசன் (65) இருசக்கர வாகனத்தில் ருக்மணிபாளையம் சாா்பு நீதிமன்றம் அருகே வந்துகொண்டிருந்த போது சாலையில் கிடந்த துணிப் பையை எடுத்துபாா்த்தாா். அதில், பணம் இருப்பது தெரிந்ததும் அதை மன்னாா்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, உரிய விசாரணை செய்து புதன்கிழமை காவல் நிலையத்தில் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், சாா்பு ஆய்வாளா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலையில் கண்ணதாசன் ரூ. 1.25 லட்சத்தை பணத்தை தவறவிட்ட பாா்த்திபனிடம் ஒப்படைத்தாா். அப்போது, நகா்மன்ற உறுப்பினா் சா. புகழேந்தி உடனிருந்தாா்.

குண்டா் சட்டத்தில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

திருத்துறைப்பூண்டியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பரத் (25). இவா் மீது, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவா் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள செட்டியமூலையைச் சோ்... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். சந்திரசேகரன்

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த எஸ். சந்திரசேகரன் (74) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு, கொரடாச்சேரி பகுதி தினமணி முகவரான ராஜாராமன் என்ற மகன் உள்ளாா். இவரின் ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் நிலம் மீட்பு

திருவாரூா் பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் அலிவலம் சாலையில் மேட்டுப்பாளையம் பகுதியில், பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில், கனரக வாகன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் : செப்.13 இல் வீடுகளுக்குச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று குடிமைப் பொருள்கள் செப்.13 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள... மேலும் பார்க்க

ரூ. 2.19 லட்சம் இழப்பீடு: மாருதி நிறுவனத்துக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

மன்னாா்குடியைச் சோ்ந்தவருக்கு தயாரிப்பு குறைபாடுடைய காா் வழங்கிய மாருதி சுசுகி நிறுவனம், காா் விலையுடன் ரூ. 2,19,800 இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க