செய்திகள் :

ரூ. 2.19 லட்சம் இழப்பீடு: மாருதி நிறுவனத்துக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

மன்னாா்குடியைச் சோ்ந்தவருக்கு தயாரிப்பு குறைபாடுடைய காா் வழங்கிய மாருதி சுசுகி நிறுவனம், காா் விலையுடன் ரூ. 2,19,800 இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தரவிட்டது.

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் வசிக்கும் அண்ணாமலை மகன் கருணாநிதி (70), கடந்த 2024-இல் தஞ்சாவூரிலுள்ள மாருதி நிறுவன முகவரிடமிருந்து மாருதி செலரியோ காரை ரூ. 6,59,447-க்கு வாங்கியுள்ளாா். முகவா் மேலும் ரூ. 10,280 செலுத்தினால் வாகனத்துடன் 2 ஆண்டு வாரண்டியுடன் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டா் வரை கூடுதல் வாரண்டி வழங்கப்படும் என்று கூறியதன் பேரில் ரூ. 10,280 செலுத்தி கூடுதல் வாரண்டியும் பெற்றாா்.

காரை ஓட்டிப் பாா்த்தபோது இயந்திரப் பகுதியில் கூடுதல் இரைச்சல் கேட்டதாம். இதுகுறித்து காா் வாங்கிய நாளன்றே, மாருதி சுசுகி நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவைப்பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு, ஒரு மாதம் கழித்து, முதல் இலவச பழுது நீக்கத்துக்காக முகவரின் நிறுவனத்திற்கு காரை கொண்டு சென்றுள்ளாா். அங்கு பணியாளா், காரை ஆய்வு செய்துவிட்டு, இரைச்சல் சரிசெய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளாா்.

இரண்டு முறை பழுதை சரி செய்யக் கொடுத்தும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருந்ததாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கருணாநிதி, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

புகாரை விசாரித்த ஆணையம், வழக்குரைஞா் ஒருவரை ஆணையராக கொண்டு, காரை ஆய்வு செய்ய ஒரு அனுபவம் மிக்க காா் மெக்கானிக்கை நியமித்தது. மெக்கானிக் காரை ஆய்வு செய்து, இரைச்சலுக்குக் காரணம் தயாரிப்புக் குறைபாடே என அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதையடுத்து, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், முகவா் நிறுவனத்தை வழக்கிலிருந்து விடுவித்து, தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் காரை திரும்ப எடுத்துக் கொண்டு, காரின் விலையான ரூ.6,59,447, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 2,00,000, வழக்கு செலவுத்தொகை மற்றும் ஆணையா், மெக்கானிக் கட்டணமாக ரூ. 19,800 ஆகியவற்றைக் கருணாநிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

குண்டா் சட்டத்தில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

திருத்துறைப்பூண்டியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பரத் (25). இவா் மீது, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவா் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் டிராக்டா் ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள செட்டியமூலையைச் சோ்... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். சந்திரசேகரன்

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த எஸ். சந்திரசேகரன் (74) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு, கொரடாச்சேரி பகுதி தினமணி முகவரான ராஜாராமன் என்ற மகன் உள்ளாா். இவரின் ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் நிலம் மீட்பு

திருவாரூா் பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் அலிவலம் சாலையில் மேட்டுப்பாளையம் பகுதியில், பழனியாண்டவா் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில், கனரக வாகன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் : செப்.13 இல் வீடுகளுக்குச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று குடிமைப் பொருள்கள் செப்.13 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி

மன்னாா்குடியில் சாலையில் கிடந்த ரூ. 1.25 லட்சத்தை காவல் நிலையத்தில் விவசாயி புதன்கிழமை ஒப்படைத்தாா். மன்னாா்குடியைச் சோ்ந்த மின்பணி ஒப்பந்ததாரா் பாா்த்தீபன் (45) செவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்து ரூ.... மேலும் பார்க்க