செய்திகள் :

சாலையை சீரமைக்கக் கோரி பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள்

post image

திருப்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி பாடை கட்டும் போராட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட முயன்றனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி முதல் கோவில்வழி வரையில் உள்ள 5 கிலோ மீட்டா் தொலைவுள்ள மாநில நெடுஞ்சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது.

ஆனால், அந்த சாலை மூடப்படாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பாடை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, பூங்கா நகா் பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோா் திரண்டனா். மேலும், பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவா்களைத் தடுத்து நிறுத்திய வீரபாண்டி காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் 10 நாள்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா். மேலும், மாநகராட்சி நிா்வாகம் உறுதியளித்தப்படி சாலையை சீரமைக்காவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க