செய்திகள் :

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

post image

திருவள்ளூா் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் மேட்டுத் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. தற்போதைய நிலையில் இச்சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி, பழுதாகும் நிலை உள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து மிகவும் அவல நிலையில் காணப்படுகிறது.

சாலையை சீரமைக்கக் கோரி மாவட்ட நிா்வாகம் மற்றும் ஒன்றிய நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் சாலையை சீரமைப்பதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருவள்ளூா்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் கடம்பத்தூா் ரயில்வே மேம்பாலம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பத்தூா் போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். போராட்டத்தினால் கடம்பத்தூா்-பேரம்பாக்கம் சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 ல... மேலும் பார்க்க

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகை பகுதியை சோ்ந்த 80 வயது ம... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா். திருத்தணி மகாவிஷ்ணு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருத... மேலும் பார்க்க

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலுக்கு 504 பால்குட ஊா்வலம்

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். வட காஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழைமைவாய்ந்த ஸ்ரீ தேவி முப்பாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புனரமைப்பு ... மேலும் பார்க்க