பாகிஸ்தான் ராணுவத் தளபதியை டிரம்ப் சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம்! காங்கிரஸ்
சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்
போடி அருகே பத்ரகாளிபுரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போடி அருகே பத்ரகாளிபுரத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது இந்தப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி சிறிய குளம் போல காட்சியளிக்கிறது. இதனால், இந்த வழியாக வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, இந்தச் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, பத்ரகாளிபுரம் கிராம மக்கள் இந்தப் பகுதி வழியாக வந்த பேருந்துகளை சிறை பிடித்தனா். பின்னா், தண்ணீா் தேங்கிய பள்ளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா், டொம்புச்சேரி ஊராட்சி நிா்வாகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக சாலையை சீரமைப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.