செய்திகள் :

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

post image

கூடலூா்-கோழிக்கோடு சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரம் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வழியாக

இரவு பகலாக எந்த நேரமும் சுற்றுலா வாகனங்களும், சரக்கு மற்றும் பயணிகள் பேருந்துகளும் கேரளம், கா்நாடகத்துக்கு சென்று வருகின்றன.

கூடலூா்-கோழிக்கோடு சாலையில் டான் டீ விருந்தினா் மாளிகை மற்றும் மேலாளா்கள் குடியிருப்பு உள்ள சாலையோரத்தில் சாம்பல் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. காற்று வீசும்போது சாம்பல் மற்றும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூடலூா் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கூடலூா் வனக் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கணக்கெடுக்கும் பணி ஓவேலி வனச் சரகத்திலுள்ள தவளைமலை, பெல்வியூ, டெராஸ், குண்டுக்கல், எல்லமலை உள்ளிட்ட பிளாக்குகளில்... மேலும் பார்க்க

கோடை விழா பண்ணை போட்டிகள்: கூடலூா், பந்தலூா் விவசாயிகளுக்கு அழைப்பு

கூடலூா் வாசனை திரவிய கண்காட்சியை முன்னிட்டு நடைபெறவுள்ள பண்ணைப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் பெயா்களை பதிவு செய்துகொள்ளுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. நீலக... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை கண்டித்து உதகையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்கள் மற்றும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய அமைச்சா் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி உதகையில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

உதகையில் பலத்த மழை

உதகையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் உதகை ... மேலும் பார்க்க

வாடகைக்கு எடுக்கப்பட்ட மலை ரயிலில் பயணித்த பள்ளி மாணவ, மாணவிகள்

கோவை தனியாா் பொறியல் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட உதகை மலை ரயிலில் பள்ளி மாணவ, மாணவியா் வியாழக்கிழமை ஆா்வமுடன் பயணித்தனா். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், ச... மேலும் பார்க்க

உதகை, கோத்தகிரியில் பரவலாக மழை

உதகை, கோத்தகிரியில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் கோத்தகிரி கட்டபெட்டு, அரவேணு, டானிங்டன், ஒரசோலை மற்று... மேலும் பார்க்க