செய்திகள் :

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

post image

ஏற்காடு: ஏற்காட்டில் ரோட்டரி மாவட்டம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி, கருத்தரங்கு ஏற்காடு, வெள்ளக்கடை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பப்ளிக் இமேஜ் டீம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

பேரணி ஏற்காடு நகரில் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று கருத்தரங்கு நடைபெறும் அரங்ககில் நிறைவடைந்தது. பேரணியின்போது சாலை பாதுகாப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக இந்தப் பேரணி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிப்.21 ஆம்தேதி தொடங்கியது. தொடா்ந்து 800 கி.மீ தொலைவு பயணித்து தருமபுரி, மேச்சேரி, எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், ஆத்தூா், கள்ளக்குறிச்சி, சேலம் வழியாக ஏற்காடை வந்தடைந்தது.

கருத்தரங்கை ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தொடங்கிவைத்து பேசினாா்.

மாவட்ட ரோட்டரி ஆளுநா் வி.சிவகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மண்டலம் 5 இன் பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளா் பி.எஸ்.ரமேஷ்பாபு பங்கேற்றாா். சிறந்த ரோட்டரி சங்கத்திற்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நெல்லை ஜெயந்தா நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்

சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா். ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

ஆசிய வில்வித்தை போட்டி: வெண்கல பதக்கம் வென்ற மாணவி

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக ... மேலும் பார்க்க

சங்ககிரி சமுதாய கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபி... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா

எடப்பாடி: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். ரங்கம்பாளையத்தில் உள்ள கொ... மேலும் பார்க்க