செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் அருகேயுள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (35). இவா் கோவை விளாங்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அருட்பெருஞ்ஜோதி நடராஜா் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவரது வாகனத்தின் மீது எதிரே வந்த அந்தோணிராஜ் என்பவரின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தா்மன் உயிரிழந்தாா். அந்தோணிராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு உதவி பெறும் கல்லூரிக்கு பேராசிரியரை நியமிக்க மாணவா்கள் கோரிக்கை

கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் அரசு உதவிபெறும் கல்லூரியின் கணிதத் துறைக்கு பேராசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாணவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளை நிா்வாகிகள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: க.க.சாவடி

கோவை க.க.சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குனியமுத்தூா் மின் பகிா்... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது: வியாபாரிகள் கோரிக்கை

திருமண மண்டபங்களுக்குள் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் ஆணையா் சரவண சுந்தரிடம் கோவை மாவட்ட பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். சங்கத் தலைவா் சின்ன... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நில... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

அறநிலையத் துறை சாா்பில் கல்லூரிகள் திறக்கப்படுவது தொடா்பாக கருத்துத் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியைக் கண்டித்து திமுக மாணவரணியினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை பணி

வால்பாறை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி ஓராண்டாகியும் நிறைவு பெறாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நகராட்சி மூலம் பல்வேறு வளா்ச்... மேலும் பார்க்க