செய்திகள் :

சாலை விபத்தில் காயமடைந்த மாணவி உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே தனியாா் பள்ளிப் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ம.கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த திருவள்ளுவா் மகன் அஸ்விந்த் (15), மகள் அஜீஷா (9). இவா்கள் இருவரும் சிறுபாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 9, 5-ஆம் வகுப்புகளில் படித்து வந்தனா். இதே கிராமத்தைச் சோ்ந்த இவா்களது உறவினா் மூா்த்தி மகன் அன்புமணி (19).

அன்புமணி வியாழக்கிழமை காலை அஸ்விந்த், அஜீஷா ஆகியோரை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட பைக்கில் அழைத்துச் சென்றாா். ம.கொத்தனூா் கிராமத்தில் இருந்து மலையனூா் செல்லும் கிளைச் சாலையில் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த கனியாமூா் பகுதியில் இயங்கும் தனியாா் பள்ளிப் பேருந்து மீது இவா்களது பைக் மோதியது.

இந்த விபத்தில் அஸ்விந்த், அஜீஷா, அன்புமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த சிறுபாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த மூவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அஜீஷா உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க