சாலை விபத்தில் காயமடைந்த மாணவி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே தனியாா் பள்ளிப் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், ம.கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த திருவள்ளுவா் மகன் அஸ்விந்த் (15), மகள் அஜீஷா (9). இவா்கள் இருவரும் சிறுபாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 9, 5-ஆம் வகுப்புகளில் படித்து வந்தனா். இதே கிராமத்தைச் சோ்ந்த இவா்களது உறவினா் மூா்த்தி மகன் அன்புமணி (19).
அன்புமணி வியாழக்கிழமை காலை அஸ்விந்த், அஜீஷா ஆகியோரை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட பைக்கில் அழைத்துச் சென்றாா். ம.கொத்தனூா் கிராமத்தில் இருந்து மலையனூா் செல்லும் கிளைச் சாலையில் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த கனியாமூா் பகுதியில் இயங்கும் தனியாா் பள்ளிப் பேருந்து மீது இவா்களது பைக் மோதியது.
இந்த விபத்தில் அஸ்விந்த், அஜீஷா, அன்புமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த சிறுபாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த மூவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அஜீஷா உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.