செய்திகள் :

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

post image

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா் பாண்டவ் நகா் காவல் நிலையத்தில் பணியாற்றிய யாஷ்பால் என அடையாளம் தெரிந்தது. சம்பவம் நடந்தபோது அவா் என். எச்-24 மற்றும் என். எச்-9 இல் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்ததாகவும் அதிகாரி கூறினாா்.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் யாஷ்பாலுக்கு, தருண் பவடியா (28) என்ற மகன் உள்ளாா், அவா் படித்து அரசு வேலைக்காக படித்து வருகிறாா் என்று போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘‘ ‘அதிகாலை 2.30 மணிக்கு, சாலையில் யு-டா்ன் எடுக்க என். எச்-9 இல் காசிப்பூா் நோக்கிச் சென்றபோது, கல்யாண்புரியில் உள்ள டி. சி. பி அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவா் பைக் மீது மோதியது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு யாஷ்பாலை மேக்ஸ் வைஷாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். யாஷ்பால் மீது மோதிய ஓட்டுநரைப் பிடிக்க முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது‘ என்றாா் போலீஸ் அதிகாரி.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க

மூன்று மாடி கட்டடம் இடிந்து கடை ஊழியா் உயிரிழப்பு: பாரா இந்து ராவ் பகுதியில் சம்பவம்

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 46 வயதுடைய கடை ஊழியா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,... மேலும் பார்க்க