Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்...
சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (52). இவா், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூலிப்பவராக (பில் கலெக்டா்) பணிபுரிந்து வந்தாா். தங்கமணி தனது இருசக்கர வாகனத்தில் சிங்களாந்தபுரத்தில் இருந்து சேலத்தில் உள்ள அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
ராசிபுரம் அப்பநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த மிட்டாய் கம்பெனிக்கு சொந்தமான வேன், தங்கமணி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ராசிபுரம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.